அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவின் முன்மாதிரி நிகழ்ச்சி


கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள புதிய கல்வி ஆண்டில் முதலாம் நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது கற்றலுக்கு ஏற்ற விதத்தில் பாடசாலையை தயார் செய்தல் எனும் சுற்று நிறுபத்துக்கு அமைய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவினரால் தனது சமூக சேவை பகுதியின் ஓர் அங்கமாக இந்த வேலைத்திட்டத்தை நிந்தவூரில் முதலாவதாக 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை தனது பெண்கள் பிரிவின் நிந்தவூர் ஊழியர்கள், பெற்றார்> ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு நிந்தவூர் இமாம் ஹஸ்ஸாலி வித்தியாலயத்தில் முலுமையான சிரமதான நிகழ்ச்சி ஒன்றை நடாத்தியது.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

Comments of the Followers (Today NTRINFOR's 2nd Anniversary:)


Intha Sevai Innum Toadara 
Allah Arul Purivanaha
Aameen

Inta Sevayil Pala Vidayangalai Arintu Kondoam.
Nangal Terintu Konda Vidayangalukaha,
Jashakallah,


Inta Sevayil Pala Vidayangalai Arintu Kondoam.
Nangal Terintu Konda Vidayangalukaha, Jashakallah, $Anees~Valaichenai~Mohamedanees434@Gmail.Com$


Name:Nowsath Moulavi
Oor:Pottuvil 0771704044
Sms Seavai Engelai Hathees Moola Pala Nanmain Pakkam Alaithu Irukkurathu Innum Pala News,Maruththuvam,Moli Kadphom Ippadiyana Nanmaihal Engelukku Valangiya Sms Seavaikku Jasakkumullah Hai Seavai Neenda Kalam Vale Valra Engel Valththu


I Am Proud Of This Service As A Nithavur Citizen And I Wish This Service Continue Successfully.


Yes.
J.Mohamed Thaiyoob.
Nintavur.


Assalamu Alaikum.
 I Am Haneef.
 I Am From Nintavur.
Nan Twitter Valayamaipil Mettronet Endra Sevayai Nadathi Varuhindran.
So, Thayavu Seithu Ennudaya Twitter Sevayai Patri Ungal Ntrinfor Valayamaipil Thayavu Seithu Pirasurikavum.


Yes, Romba Use Nisha. Akkaraipattu.
Ntr Infor Innum Thodara Vandum


intha Sms Seavai Moolam Naangel Kathees ,
Maruththuvam,
News,Molikadphom Ivai Anaiththalaum
Naangel Pala Nanmaihal Adainththom
Jasakkumullah Hair
Sms Seavai Palakalam Valar
Em Duvakkal
Neme :Dr.Haneefa(Amirshap) Uor Pothuvil



Mehap Payanulla Sevai. Mrs.P.Meganathan Natpttimunai.


Ntr In Sevai Melum Thodara Vaalthukal.
Naan Unkal Muhavaraha Inainthu Kolla Mudiyuma?
Maligaikadu
Najath


Ntr In Sevai Melum Thodara Vaalthukal.
Naan Unkal Muhavaraha Inainthu Kolla Mudiyuma?


Kaala Soolnilaihalukeatpe Ellai Thaandi Paranthu Seyalpadum Namathu News 1st Ntrinfor Ku 
Namathu Koadana Koadi Vaalthukkal Indrum Endrum.
From:Raheem, Eravur.


Kaala Soolnilaihalukeatpe Ellai Thaandi Paranthu Seyalpadum Namathu News 1st Ntrinfor Ku 
Namathu Koadana Koadi Vaalthukkal Indrum Endrum.
From:Raheem, Eravur.


Assalamu Alaikum...
Emathu Twitter Patri Poduwingalaa??
Unga Twtr Patri Naanum Poaduran..


Assalamu Aalaikum,
Aam, Nineivi Maranda Hadis ,
Mukkiya Thahavalgalei Ponru
Innum Ithei Ponru Niraya Seveihalei Valagiya
@Ntrinfor Seveiku 
Nanrigaludan
2 Varuda Purthikku Valthuginren ,
Innam Inda Sevei Valara Pirarthikinren ,
F.Shazna . Wellampitiya.



Masha Allah,
Really I Appriciate You.
Nowshard – Kathankudi.


Your Serves Very Well.
Indach Sevai Muolam Inraya 
Naatu Nilavarangalai Arindu Kolla Mudihirathu 
Itarckaaha Mihavum Nanri
104/A Al Muneer Road
Sammanthurai R.M.Safak


Thangs Enru Oruvathayil Sonal Pathathu
 Irunthalum Nantrey
 Umathu Savayku Alahven Uthaveutan
 Inum Serapaga Inum Pala Vetheyasaththoto Ether Pakerom
Umathu Payanathay.
Ar.Sajith Thangs


Islamiya Sadda Mulaathaarankalai Aathaara Purvamaaka Tharukinramai
Makilchi Aligkinrana.
Eru Molienaium Kagka Mudikinrathu.


Assalamu Alaikum
Happy Birthday
Your Service Superb
&
Awesome,...........
My Request:


Wish U Al The Best
Tnk U Ntr.....
Knowledgable News,,,,
Useful Tips
Islamic Facts N So On Are Realy Useful 4 Our
 Every Aspect Of Lyf....
I Appreciate U Dat Ur Faithful Service.....
Once Again Tnx 2 Ur


Jasahallahoo Kair Thoadarnthu Sewai Aadra Walthukkal . Abdul Basith


Ungkal Sevai Poatruthatkuriyadhu.Gk,
English-Sinhala Moli Arivum Sirappu-Melum Pudhiya 
Vidayangkaludan Munnedukka Vaalththukkal @
Mlfz


Umathu Inthe 2 Varude Sevai
Yemakku Mihavum Payenalithathu.
Athavethu, Nangal Therinthu Kollathe Videyengalaium,
Pale Sinthanaihalaium.
Umathu Sevai Valangiyemaikku Yem Nanrihal.
 I'm Ilfana. From Mavadippalli.


@Ntrinfor:
Umathu Intha Seavai Engaluku Mihavum Payanaha Amainthathu
Athu Mattumanri Engaluku Theriyatha Pala Vidayangalai Katru
Thanthathu Ithu Entha Thadaium Inri Thodara
Valla Iraivan Thunai
Sharmila,
Pottuvil


Ntrinfor
Indrudan 2 Aavathu Varudaththil
Kaikorppathil
Perumahilchchiyadaivatil Naanum Oruvanaka Irupathil Santhosam.
Thank For Ur Service.
Bishrul Haafi


Arivai Arampamaha Ariya Waithu,
Katru Kondirukum Eankaluku Pala Ariyatha Widayankalaiyalam Ariya Waithu,
Eankalathu Ariviku Velicham Podu Kaadi Kondirukum Ntrinfor Ini Men Mellum Sirapaha Ualaham Puraha Walam Waruwathuku Manamara Walthukinrom By:Mufeetha~Evr


(Sinhala-Today)
Ithu Nalla Sevai Melum Thodara Valthukal


Ungal Ntr Nfor Ethanal
Nan Pala Waran Nanmihali Paidukondan .
Ethu Malum Malum Valara Enathu Valthukal .
Rina
Natpiddimunai


Palsuwayodu Palthahawalhal Sumanthu Wanthu
Wasahar Em Nenjai Kollaihonda Em Anbartha Ntrinfore
Innum Pallandu Un Sewai Thewai !
Walampera Walthukiren Happy 2nd Anniversary !
@Sacm.Ijas Eravur@


புதன், 25 டிசம்பர், 2013

கிழக்கு மாகாண மூன்று முன்னோடிகள் இணைந்த முப்பெரும் விழா. -கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீட் பிரதம அதிதி-

                ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம், உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் இணைந்து நடாத்திய முப்பெரும் விழா நேற்று (16) சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு, விளையாட்டு, தொழில் நூட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன். செல்வநாயகம், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டிலான ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று (15) அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையிலான இம்மாநாட்டில் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஓல்.டீ.மனாப் ஆகியோருடன் அம்பாரை மாவட்ட கரையோர செய்தியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கட்சியில்,

புதன், 11 டிசம்பர், 2013

உயர்கல்விக்காக கெய்ரோ பயணம்


( V.vy;.V.wgPf; gph;njs]; )
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாபிழ்- மௌலவி யு.சு.முஹம்மது ஆதில் (ஷர்கி) அவர்கள் கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்; 2013-2014ம் ஆண்டிற்;கான  புலமைப்பரிசிலைப் பெற்று ஷரிஆ கற்கை நெறியை மேற்கௌ;வதற்காக எதிர்வரும் (டிசம்பர்)14ம் திகதி கெய்ரோ பயணமாகவுள்ளார்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஹியுமன் லிங் நிறுவனத்தின் சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும்.

      -பிரதம அதிதி மாகாண அமைச்சர் மன்சூர் 4 மில்லியன் ஒதுக்கீடு-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஹியுமன் லிங் நிறுவனத்தின் ஆறு வருட நிறைவையொட்டி நடாத்தப்படுகின்ற சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும் நேற்று மாலை (08.12.2013) மருதமுனை  கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற்பயிற்சி; கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன், சிறுவர் நன்நடத்தை நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் மௌலவி.என்.ஜீ.அப்துல் கமால், ஹியுமன் லிங் தலைவர் கே.முகம்மட் றொசான், தென்கிழக்கப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், சமூக சேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சனி, 7 டிசம்பர், 2013

சூறாவளியாக மாறுகிறது தாழமுக்கம்; கிழக்கில் இன்று பலத்த காற்று வீசும்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறி வருகிறது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (7) மாலை பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
sc0226041bமட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சில சமயங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை தொடக்கம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
metromirror.lk

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி கலையரங்கில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் வலயக் கல்விக் காரியாலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.கலீல், ஏ.எல்.சக்காப், நிருவாக உத்தியோகத்தர். ஏ.ஜுனைதீன், பொறியியலாளர் ................................ ,

நிந்தவூரில் திவிநெகும திட்டத்தின் கீழ் பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்தி வரும் ' திவிநெகும' திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச கமநல சேவைகள் நிலைய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பழமரக்கன்றுத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.

திங்கள், 2 டிசம்பர், 2013

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்.!


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரி.ஏ.நிசாம்  நேற்று நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்வருடம்  மதீனா மகா வித்தியாலயத்திலிருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தகுதிகாண் பரீட்சையின் முடிவுகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாமும், நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமும் பார்வையிட்டனர்.

அடி மட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் க.பொ.த(சா/த) மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.

கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத மாமனிதராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். - ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி புகழாரம் -


               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நம் நாட்டுக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதில் நமது ஜனாதிபதி மிகவும் அக்கரையோடு செயற்பட்டு வருகின்றார். இதனால் நமது நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு மாமனிதராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார்' என்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளருமான எம்.பி.எம்.மாஹிரின் மூன்று இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டு விழா சனியன்று கொழும்பு, வெள்ளவத்தை மெரின் கிரான்ட் பென்கிற் ஹோலில் இடம் பெற்றது.
அகில இலங்கை றபியத்துல் தரீக்கா அசோசியேஷனின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய செய்யத் முஹம்மட் யூ.பி.ஆஸீக் தங்கள் றிபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிந்தவூரில் படையினருக்கும் பொது மக்களுக்குமிடையிலான முறுகலினை வெறும் அரசியலாக மாற்றுவதற்கு பெரும் தேசிய கடும் போக்குவாதிகள் முயற்சிப்பதில் நின்றும் விடுபட வேண்டும். -ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி எச்சரிக்கை-

            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நிந்தவூரில் படையினருக்கும், பொது மக்களுக்குமிடையிலரன முறுகலின் போது ஏற்பட்ட மக்களது உணர்வுகளையும், அவர்களது நியாயமான வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ளாது, வெறுமனே எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடும், சந்தேகப் பார்வையோடும் நோக்குவதிலிருந்து இந்நாட்டிலுள்ள பெரும் தேசிய கடும் போக்கு வாதிகள் விலகிக் கொள்ள வேண்டும்' என ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்:-

ஞாயிறு, 24 நவம்பர், 2013

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல். -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல்.
              -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி ஹரன் பெரேரா தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜென்ரல் லால் பெரேரா, காரைதீவு 631வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் பிரியந்த கமகே, அம்பாரை மாவட்ட இராணுவ சிவில் பொறுப்பதிகாரி மேஜர் நவரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் போன்றோருடன் தற்கால பாதுகாப்பு நிலவரமும், முஸ்லிம் பிரதேசங்களும் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் பற்றி ஆராயும் உயர்மட்ட மாநாடு.


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை ஆராய்ந்து, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்மட்ட மாநாடு இன்று நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க, காரைதீவு 631வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி கேணல்.பிரியந்த கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.எம்.றியாஸ், கிராம சேவகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க ' யாரோ இனந்தெரியாத சிலர் அண்மைக் காலங்களாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் மக்களின் அமைதியைக் குலைத்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் தூர இடங்களிலிருந்து வர முடியாது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்களைப் பிடிக்க பொது மக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும். பொது மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது. சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கவே பொலிசார் இருக்கின்றனர். இவ்வாறான விடயங்களில் பொலிசாரைச் சந்தேகங் கொள்ளக் கூடாது. மக்களுக்கும், பொலிசாருக்குமிடையில் நல்லுறவு பேணப்பட வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.










செவ்வாய், 19 நவம்பர், 2013

நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் ஜெமீல் அவசர பிரேரணை!

Jameel (6)

(அஸ்லம் எஸ்.மௌலானா)
நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாராண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை அமர்வில் அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்விலேயே அவர் இந்த அவசர பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

திங்கள், 18 நவம்பர், 2013

நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு. இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.


நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு.


இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. 

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்றிரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட குழுவினர் பாதுகாப்பு தரப்பினர் என அடையாளம் கண்டுள்ளனர்.


ஞாயிறு, 17 நவம்பர், 2013

'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை நிகழ்வு நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் இடம் பெற்றது.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் 'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் ஏற்பாட்டிலான தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு
இன்று (15) நிந்தவூர் அல்லி மூலைச் சந்தியில் இடம் பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமிறுல் பாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரங்களை நட்டி வைத்தார்.

நிந்தவூரில் ஜனாதிபதியின் "தேசத்திற்கு நிழல்" மரநடுகை விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
 
அதிமேதகு ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(15)  நாடு முழுவதும் நடைபெற்ற 'தயட்ட செவன' (தேசத்திற்கு நிழல்)  தேசிய மரநடுகை விழா நிந்தவூரிலும்  சிறப்பாக நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹாநாயக்க> நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி;.எம்.மாஹீர்> கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு> மரங்களை நட்டி வைத்தனர்.  

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவு

பொதுநலவாய நாடுகளின் 22வது அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த மாநாட்டுக்கான பணிகள் கடந்த 10ம் திகதி முதல் இடம்பெற்று வந்தன.

இதன்படி ஹம்பாந்தொட்டையில், பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு நடைபெற்றிருந்தது.

அத்துடன் காலியில் பொது மாநாடு நடைபெற்றது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெற்றது.

இதில் 2000க்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டளர்கள் பங்குபற்றி இருந்தனர்.

உருளை கிழக்கு வரி குறைப்பு



உருளைக்கிழக்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் இன்று முதல் குறைக்கப்பட உள்ளன.

நிதியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி, இறக்கமதி செய்யப்படும் விதை உருளைக்கிழக்கு கிலோ ஒன்றுக்கான இறக்குமதி வரி 30 ரூபாவாலும், பெரிய வெங்காயத்தின் வரி 25 ரூபாவாலும், சிறிய வெங்காத்திற்க வரி 10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

புதன், 13 நவம்பர், 2013

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச பாடசாலை மாணவர்களிடத்தில் பசும் பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ்> பாடசாலை மாணவர்களிடத்தில் பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கம் நிகழ்வு நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர்> நிந்தவூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஏ.தையூபா ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நிந்தவூர் அல்-மதீனா ம.வி ஆசிரியைகளின் பிரச்சினைக்குத் தீர்வு. பிரதிக்கல்விப் பணிப்பாளர் முக்தாரிற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டு!

( சௌத்துல் உம்மத் )

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

site counter