அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 24 அக்டோபர், 2012

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணத்தண்டனை


                                                                            ( சி.எம்.ரிக்பாத்)

புஸ்ஸலாவ, ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கூரான ஆயுததத்தால் வெட்டியும் பொல்லுகளால் தாக்கியும் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்க கண்டி மேல் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய மூவருக்குமே கண்டி மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க மரணத் தண்டனை விதித்துள்ளார்.

ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதான முதியன்ஸலாகே செனரத் பண்டா என்பவர்; கூரான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்கானப்பட்ட அதே தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து கோவிந்தசாமி (வயது 54), அவரது மனைவியான இந்திராணி வைத்தியலிங்கம் (வயது 49) மற்றும் அவர்களுடைய மகனான கோவிந்தசாமி ஆகிய மூவருக்குமே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதன் பின்னர் வழக்கு கண்டி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

இவ்விசாரணைகளின் போது மனுதாரர் தரப்பில் அரச சட்டத்தரணி உதய கருணாதிலக்கவும் எதிராணிகள் சார்பில் சட்டத்தரணி மர்வின் சில்வாவும் ஆஜராகி வந்தனர்.

இருதரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளின் பின்னர் வழக்கு விசாரணைகள் முடிவுற்றதையடுத்து இது குறித்து ஆராய்ந்த நீதவான் கொலைக்குற்றச்சாட்டில் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மூவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் கைது


 (சி.எம்.ரிக்பாத்)

மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் பாடசாலை அறையொன்றில் வைத்து மாணவியின் முன்னிலையில் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக நின்றுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த அதிபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்



சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்தியர்கள் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அவசர நடவடிக்கைகளில் மாத்திரமே வைத்தியர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

site counter