அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சீல் வைப்பு..!

( சௌத்துல் உம்மத் )

டாக்டர் றசீட் தலைமையிலான இயக்குனர் சபையைக் கொண்டு இயங்கிய சம்மாந்துறை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இயங்கி வந்த இவ்இயக்குணர் சபை தமது சேவைக் காலத்தில் சமூர்த்திப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கென்று உலர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்த வகையில் பலருக்குப் பணம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

அம்பாறை மாவட்ட சமூர்த்தி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிலையமும் இன்று சம்மாந்துறையில் திறந்து வைப்பு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாறை மாவட்ட சமூர்த்தி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிலையமும் இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வர்த்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் வின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், அம்பாரை மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, பிரதேச செயலாளர்களான எம்.ஐ.எம்.தௌபீக், எம்.மன்சூர் ஆகியோருடன் சமூர்த்தி உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில் சிப்தொற புலமைப் பரிசில், திரியபியச வீடுகள் கையளிப்பு. -பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு-

               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூரில் 'சிப்தொற' புலமைப் பரிசில்> 'திரியபியச' > இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி> எம்.சி.பைசால் காசீம்> மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில்; சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா. -பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-

நிந்தவூரில்; 
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா.
-பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌhஸ் )



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் சமூர்த்திப் பிரிவினர் நடாத்திய 'சமூர்த்தி கௌரவிப்பு விழா' நேற்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடும். நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் - உயரதிகாரிகளுடன் நேரடி உரையாடல்.

வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடும்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் - உயரதிகாரிகளுடன் நேரடி உரையாடல்.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேச எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று(20) மாலை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கவிஞர். எஸ்.ஜலால்டீன் எழுதிய 'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா. -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-

கவிஞர். எஸ்.ஜலால்டீன் எழுதிய
'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
                  -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-
             (ஏ.எல்.ஏறபீக் பிர்தௌஸ்)
கவிஞர்.எஸ்.ஜலால்டீன் எழுதிய ' பூப்படைந்த பூக்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(20) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்றப் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் , கவிஞர். மன்சூர் ஏ.காதீர், கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்றப் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, நூலின் முதற் பிரதியை நூலாசிரியர், பிரதம அதிதி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கி, நூல் வெளியீடு இடம் பெற்றது.
அதிதிக்கான முதற்பிரதியை இளம் புரவலர் ஏ.சீ.யஹியாக்கானிற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ' கவிஞர் ஜலால்டீனைப் போன்ற யதார்த்தங்களை தமது மண்வாசனையில் சொல்லக் கூடிய நல்ல கவிஞர்கள் போற்றப்பட வேண்டும். ஊரிற்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தரக் கூடிய இவர்கள்; ஊக்குவிக்கப்பட வேண்டும். இக்கவிஞனின் பேனா முனை இச்சமூகத்தின் விடிவிற்கான ஒழிக்கீற்றை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' எனப் பிரார்த்திக்கிறேன்.' எனத் தெரிவித்தார்.










site counter