அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 29 அக்டோபர், 2012

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் பலத்த காற்று வீசும் அபாயம்; மலையகத்தில் மண்சரிவு!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேங்கள் கொந்தளிப்பாக காணப்படுகின்றன.
அதேவேளை வடக்கு கிழக்கு கடற்பகுதியில் மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 மிலோ மீற்றர் வேகத்தில் இன்று இரவு காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில்,அதி கூடிய 187.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கந்தாய் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் சூரியகுமாரன் குறிப்பிட்டுள்ளார்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரத்மலானையில் இருந்து பலாலி நோக்கிய விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரத்மலானை விமானம் நிலையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மலையகத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரேந்தும் பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்து வருகின்றன.
லக்ஷபான நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்ததால் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் நேற்று திறக்கப்பட்டன.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்வதால் ஆங்காங்கே சிறியளவிலான மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி பி ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹட்டன் பிரதேசத்தில் பல இடங்களில் சிறிய அளவிளான மண்சரிவு ஏற்பட்டுள்ளன.
ஹட்டன் டன்பார் மைதானத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று குடியிருப்புகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் காமினிபுற, சமநலகம மற்றும் பண்டாரநாயக்க நகரம் போன்ற பிரதேசங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் 072 7878787 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகமுத்து நந்தகுமர் பொது மக்களை கேட்டுள்ளார்.
முல்லைத்தீவிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்தின் கடல் சமாச தலைவர் கூறுகிறார் ஸ்ரீகந்தராஜா அருள்ஜெனீபர் கூறியுள்ளார்.

பாரிசவாத நோயினால் வருடாந்தம் 06 மில்லியன் பேர் மரணம்!


உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் நாளொன்றுக்கு 40-50 பேரளவில் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக பாரிசவாத தினம் இன்று (29) திகதியாகும். இத்தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்படி தகவல் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் படி ஆட்கள் பாரிசவாதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்நாட்டில் ஆஸ்பத்திரிகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணை புரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது.
இதேநேரம் இந்நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இரு மடங்குகள் படி அதிகரித்து வருகின்றது. அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இந்நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது.
என்றாலும் உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இம்மரணங்களில் 80 % வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
அதேநேரம் மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்பதுடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தினத்தை முன்னிட்டு இலங்கை மருத்துவர்கள் சங்க மண்டபத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பத்மா குணசேகர எழுதியுள்ள பாரிசவாத நிவாரணம் என்ற நூல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

site counter