அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

டுபாயில் தங்கத்தினால் எழுதப்பட்ட 450 வருடங்கள் பழமை வாய்ந்த அல்குர்ஆன் பிரதி (படம்)




தூய தங்கத்தினால் எழுதப்பட்ட 450வருடங்கள் பழமைவாயந்த அரிய புனித அல்குர்ஆன் பிரதியொன்று அண்மையில் துபாயில் நடைபெற்ற உலக ஆடம்பரக் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது. 

இப்பழமை வாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது தூய மான் தோலினால்செய்யப்பட்ட பக்கங்களில்,தூய தங்கத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ் அல்குர்ஆன் பிரதியின் அட்டைகள் தூய பனைமரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பழமைவாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது டமஸ்கஸ்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பழமைவாயந்த புனித அல்குர்ஆன் பிரதியானது துபாயின் அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.16ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய ஜவ்ஹார் வகையைச்சார்ந்த  வாலுடன்,22கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட வாலுறையும் துபாய் உலக கண்காட்சியில்அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15முதல்17ஆம் திகதிவரை துபாயின் அல் அரப் அல்புரூஜில்,துபாய் உலக ஆடம்பரக் கண்காட்சி இடம்பெற்றது

ஆதரவாளர்களை உஷார் மடையராக்குவதில் மு.கா.வுக்கு நிகர் எதுவும் இல்லை; ராஜினாமா செய்யவே மாட்டார்கள்!


SLMC Logo

கரையோர மாவட்டக் கச்சேரி கேட்டு நின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகச்சிறிய தேவையான மேலதிக அரசாங்க அதிபரையும், தமது கட்சியினருக்கு பதவிகளும் கேட்டு, ஒரு மாத காலத்துள் இவை நிறைவேற்றப்படா விட்டால் அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக் கூறியிருப்பது வெறும் வாய்ச்சவாடலே தவிர அரசு இந்த சாதாரண நிபந்தனைகளைக் கூட நிறைவேற்றப் போவதுமில்லை.இவர்கள் ராஜினாமா செய்யப்போவதுமில்லை என்பதை ஒரு சவாலாகவே கூறுகிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது;
இந்த நாட்டின் அரசியல் கட்சிகளில் மிகவும் பகிடித்தனமான அரசியல் செய்வது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான்.
விட்டமின் இல்லாமல் தமது ஆதரவாளர்கள் சோபை இழக்கும் போது இவ்வாறான வார்த்தைகளை கூறி அவர்களை உஷார் மடையர்களாக்குவதில் மு.காவுக்கு நிகர் இல்லை என்றே கூறலாம்.
அப்பட்டமான சுயநலன்களை மட்டுமே கருத்திற் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி 2010ம் ஆண்டு ஐ தே க.வில் போட்டியிட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற பின் அக்கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு அரசுடன் இணையும் போது சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் எதைப் பற்றியும் பேச்சுவார்த்தை செய்யாமல் பதவிகள் மட்டும் தந்தால் போதுமென அடிமை நிலையில் அரசுடன் சேர்ந்தார்கள்.
அத்தோடு நிற்காமல் வெட்கங்கெட்ட தனமாய் 18வது திருத்தத்துக்கும் ஆதரவளித்து விட்டு பெரியதொரு தவறை செய்து விட்டோம் என தலைவர் தேர்தல் மேடைகளில் புலம்பினார்.
அதே போல்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் வீறாப்பு பேசி விட்டு அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு முட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் புதிதாக ஞானம் வந்தவர்கள் போல் அரசுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து ஒரு மாத காலக்கெடுவும் விதித்துள்ளமை இந்த ஆண்டின் முதலாவது நகைச்சுவையாகும்.
அரசுடன் இணையும் போது சமூகம் பற்றி அக்கறை இல்லாமல் பதவிகளுக்கு அடிமையாகி இணைந்து விட்டு இப்போது நிபந்தனைகள் இடுவதும் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக அச்சுறுத்துவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வழமையான ஏமாற்று அரசியலாகும்.
அதன் ஆதரவாளர்களும் உஷாரடைந்து அல்லாஹு அக்பர் என கோஷம் போடுவதும் பின்னர் ஏமாந்து தலைவர்களை ஏசித்திரிவதும் புளித்துப்போன ஒன்றாகும்.
மௌலவி ஆசிரிய நியமனம்!
இந்த நாட்டின் வரலாற்றில் 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவாக களமிறங்கு முன் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை பேசி அதனை ஏற்றுக் கொள்ள வைத்ததோடு அதனை பெற்றுக் கொடுத்தும் சாதனை படைத்தது.
அதுவும் எமக்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத நிலையில் நாம் ஹெல உறுமய போன்ற இனவாத கட்சிகளுடன் போராடி இதில் வெற்றி பெற்றோம்.
மு. கா ஸ்தாபக தலைவர் அமைச்சர் அஷ்ரபால் கூட முடியாது போன இதனை நாம் செய்தும் இதற்கு நன்றிக்கடன் செலுத்த இந்த சமூகமோ, மௌலவிமாரோ முன்வராத போதும் சமூகத்துக்காக துணிச்சலுடன் தொடர்ந்தும் நாம் இஸ்லாமிய அரசியல் செய்து வருகிறோம்.
சமூக அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி எம்மைப் பார்த்தாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பாடம் படிக்க வேண்டும்.
அதை விடுத்து இவ்வாறு தமது பழைய கோரிக்கைகளை கைவிடுவதும் பின் சின்னச்சின்ன நிபந்தனைகளை இடுவதும், ராஜினாமா செய்வோம் என கொக்கரிப்பதும் பின்னர் இரகசியமாக ஏதாவது பதவியை பெற்றுக் கொண்டு, அரசு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது என்று சொல்லி மக்களை சமூகத்தை ஏமாற்றுவதும் தான் இக்கட்சியின் தொழிலாகும்.
எம்மைப் பொறுத்தவரை சுயநலவாத ஏமாற்றுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதாவுள்ளா கட்சியையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் தூக்கி வீசாத வரை அவர்களால் தமது சுயநல அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சமூக அரசியலை நோக்கி நடைபோட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம்.

மு.கா.வை முஸ்லிம் என்ற நாமத்துடன்தான் பதிவு செய்தோம்; விளக்குகிறார் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்!


உலமா கட்சி பதிவதற்கு அந்த ‘உலமா’ என்ற சொல்லை நீக்கி விட்டால் அக்கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதற்காக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார் என்று முபாறக் மௌலவி அண்மையில் கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

உண்மைதான் மேற்படி விடயம் தொடர்பாக வாசிக்கம் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பதிவதற்காக சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையாளரை மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ;ரப் அவர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான நானும் சட்ட வல்லுனரான பாயிஸ் முஸ்தபாவும் சென்றிருந்த போது அப்போதைய தேர்தல் ஆணையாளர் திரு. சந்திர ஆர். டி.சில்வா அவர்கள் எங்களைப் பார்த்து கூறியதைப் போல்தான் இப்போதையத் தேர்தல் ஆணையாளரும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதனை இங்கு நான் ஆச்சரியத்துடன் ஞாபமூட்டிப் பார்க்கின்றேன்.
அதாவது முதலில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரை மாற்ற வேண்டும் முக்கியமாக முஸ்லிம் என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இன ரீதியில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் பதிவதில்லை என்றும் மறுத்துரைத்தார்.
ஆனால் மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்கள் அதற்கு இணங்கவுமில்லை தேர்தல் ஆணையாரின் ஆணைக்குப் பணியவுமில்லை.
அப்படியென்றால் எங்களுக்கு முன்பு பதிந்த ‘தமிழ்’ அரசுக் கட்சியில் உள்ள தமிழ் என்ற சொல்லுடன்தான் அன்றும் அங்கீகரிப்பட்டுள்ளது என்ற நீண்ட காரசாரமான விவாதத்தின் பின்பு பல சட்ட நுணுக்கக் கோட்பாடுகளையும் கட்சியின் ஆவணங்களையும் நாங்கள் சமர்ப்பித்தோம்,
இதே முஸ்லிம் காங்கிரஸ் தான் அரசியல் கட்சியாகவே 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும் அது காத்தான்குடியில் நடந்த அங்குராப்பணக் கூட்டத்தில்தான் எங்களால் தெரிவு செய்யப்பட்ட இதே பெயர்தான் அன்று சூட்டப்பட்டது எனவும் வாதிட்டோம்
எனவே பெயரை மாற்றமாட்டோம், முஸ்லிம் என்ற சொல்லையும் நீக்கமாட்டோம் எனத் தெரிவித்ததுடன் ஏறக்குறைய கடந்த 6 ஆண்டுகளாக இப்பெயருடன்தான் செயற்பட்டு வருவதாகவும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்தினோம்.
இந்நிகழ்வு 1986ம் ஆண்டு கொழும்பு – 7, றோயல் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கேம்பிறிச் பிளேசில் அமைந்திருந்த தேர்தல் ஆணையாளரின் காரியாலயத்தில் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் ஒரு பகுதிதான் இது.
இக்கட்சி 1980ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு பதியும்வரை அன்றுமுதல் அரசியல் ரீதியாக மட்டுமே எமது பிரதேசத்தில் செயற்பட்டு வந்தன என்பதற்கான ஆவணங்கள் அத்தனையையும் பத்திரிகைச் செய்திகள் கடிதத் தொடர்புகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கூட்டக் குறிப்புகள் எல்லாவற்றையும் ஒருமித்து சமர்ப்பித்த போது தேர்தல் ஆணையாளரினால் எதுவும் பேச முடியவில்லை.
கடந்து வந்த 6 ஆண்டுகளுக்கான ஆவணங்கள்தான் அக்கட்சியைப் பதிவதற்கும் அன்று உதவியது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மறைந்த மாமனிதரின் விவாதத் திறமையும் பாயிஸ் முஸ்தபாவின் சட்ட வியாக்கியானமும் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணக் குறிப்புகளும் கட்சி நடவடிக்கைக் கோவைகளும் ஆதார பூர்வமாக இருந்ததினால் அப்போதைய தேர்தல் ஆணையாளரினல் எங்களுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை.
இறுதில் இக்கட்சிக்கு முஸ்லிம் என்ற அப்பெயருடன்தான் பதியப்பட்டது. அச்சொல் வெட்டி நீக்கப்படவில்லை என்ற ஒரு வரலாற்றுச் சரித்திரத்தை இவ்விடத்தில் இன்றும் குறிப்பிட்டுக் காட்டுவதில் பெருமைப்படுகின்றேன்.
இதுவரை இக்கட்சியின் பெயரால் சுமார் 25 நாடாளுமன்ற பிரதிநிதிகளும் 1000க்கு மேற்பட்ட மாகாண சபை, மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை போன்ற அரசியல் அதிகார உறுப்பினர்களை நாடு பூராகவுமிருந்து பெற்றுவந்துள்ளது. இன்றும் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது இக்கட்சியில் வரலாற்றுச் சம்பவும் சரித்திரமும் சாதனையுமாகும். அத்துடன் உத்தியோகம், உயர் தொழில், துறைமுகம், பல்கலைக்கழகம், அரச, தனியார் நிறுவனம் என்று பல்லாயிரம் பேர் இவர்கள் எல்லோருக்கும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் தான் மூலதனம். அவர்களின் அடித்தளமும் அத்திவாரத்தின் அடிக்கல்லும் அந்த சீதேவிதான். சுபஹானல்லாஹ்!
இது போன்ற எண்ணற்ற தடைகளையும் தாண்டித்தான் அவைகளை நாம் கடந்து வந்துள்ளோம். நாங்கள் பெற்ற அப்போதைய வலிகளின் வேதனைகளையும் இப்போதைய இந்த ‘முஸ்லிம்’ அரசியல்வாதிகள் எத்தனை பேருக்குத்தான் தெரியும் என்பது எனக்கு என்னவோ இன்னும் சந்தேகம்தான்.
அந்த முஸ்லிம் என்ற சொல் அன்று நீக்கப்பட்டிருந்தால் இன்றுள்ள இவர்களில் பலர் நாடாளுமன்ற கதிரைகளைக் கண்டிருப்பார்களா என்று அண்மையில் வெளியான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்று ஆய்வுப் புத்தகத்தில் அந்த ஆய்வின் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளதை இத்தருணத்தில் இங்கு தொட்டுக்காட்ட விருப்புகிறேன்.
கடந்த 33 ஆண்டுகளாக முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டதில் இன்றுவரையும் இக்கட்சியுடன் என்னை இணைத்துக் கொண்டு இடைவிடாது இம்மண்ணின் மேல் தொடர்ந்து பயணிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் காங்கிரஸின் மூத்த முதல்வன் இவன் மட்டும்தான். வேறு எவரும் எம்மத்தியில் இன்று இல்லை. அல்ஹம்துல்லாஹ்!
Gafoor

site counter