அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 17 ஜூன், 2014

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில்
பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா.
             -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் புதிதாய் அமைக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா நேற்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 கல்லூரி அதிபர் திருமதி ஹபீலா சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம் , சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பற்சிகிச்சை நிலையத்தைத் திறந்து வைத்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் எம்.எஸ்.இப்றாலெவ்வை, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எல்.சஃபீர் யூ.எல்.பஸீர், ஏ.எம்.தபீக், டொக்டர் ஐ.அப்துல் மஜீட் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், கல்விமான்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மன்சூர் இங்கு உரை நிகழ்த்தகையில்;;:- 'கிழக்கு மாகாணத்திலுள்ள பொருத்தமான பாடசாலைகள் பலவற்றில் இது போன்ற பல பற்சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்கான திட்டங்களை வகுத்து, செயற்படுத்தி  வருகிறோம். விரைவில் இதன் பயனைப் பல பாடசாலை மாணவர்கள் அடைவர்' எனத் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter