அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 14 நவம்பர், 2012

இலங்கை வர்த்தக சமூகத்தினருடன் உகண்டா ஜனாதிபதி சந்திப்பு!





-இர்ஷாத் றஹ்மத்துல்லா-

இலங்கை்கு வருகைத்தந்துள்ள உகண்டா நாட்டின் ஜனாதிபதி யுவேரி ககுடா முசவேணி இன்று இலங்கையின் வர்த்தக சமூகத்தை சந்தித்து கலந்தரையாடினார்.இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்தன,இலங்கை ஏற்றமதி அபிவிருத்தி சபையின் தலைவர் ஜனக ரத்னாயக்க,அமைச்சின் செயலாளர் அநுர சிறிவா்தன,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகம உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
உகண்டா ஜனாதிபதியின் வருகையினை நினைவு கூறும் வகையில் அமைச்ர றிசாத் பதியுதீன் நினைவு பரிசு ஒன்றை வழங்கி வைத்தார்.அதே வேளை ஜனாதிபதி தமது வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதிவு புத்தகத்தில் தமது கையெழுத்துக்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

site counter