அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 10 அக்டோபர், 2012

யாழ்.செயலகத்தில் நாய்கள் ஊளையிட்டதாம்; TNA எம்.பி.க்களின் செயல் குறித்து ஆளுநர் விசனம்!



யாழ்.செயலகத்தில் திங்கட்கிழமை) சில நாய்கள் வந்து குரைத்துக் கொண்டிருந்தன. உங்களிற்கும் அது கேட்டதாவென கேள்வி எழுப்பியுள்ளார் வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.
நேற்று செவ்வாய்க்கிழமை வட மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை அழைத்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான வட மாகாண ஆளுநர மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் கலந்து கொள்ள மண்டபத்த்pனுள் வருகை தந்தபோது தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ உள்ளுராட்சி சபைத் தலைவர்களோ எவரும் அவரை கணடு கொள்ளவோ மரியாதை வழங்கும் வகையில் எழுந்து நிற்கவோயில்லை.
இந்நிலையில் வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை நேற்று அழைத்து வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதிச் செலவு செய்யப்படாமை குறித்து பாய்ந்து விழுந்த அவர் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜந்தாறு நாய்கள் வந்து ஊளையிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்நாயகளின் ஊளைச் சத்தம் உங்களுக்கும் கேட்டதாவென அவர் அதிகாரிகளை பார்த்து கேள்வியும் எழுப்பினார்.
நாய்களது ஊளையினால் எதனையும் தன்னால் அங்கு கேட்க முடியாது போய் விட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

site counter