100 கோடியிலான நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் இன்று மக்களிடம் கையளிப்பு.
சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பாரிய ஏற்பாடுகள்.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நீண்ட காலமாகப் பணரமைக்கப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளி வாசல் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
பராக்கிரம பாகு மன்னன் காலத்தில் இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம் பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும், வள்ளல் குணத்தினாலும் சுமார் ருபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இதன் நிர்மான வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்று(22) இப்பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கவுள்ளதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தெரிவித்தார்.
இதேவேளை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்றது போல் பாரிய கந்தூரி (அன்னதான நிகழ்வு) வும் இடம்பெறுவதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இன்று நிந்தவூரிலுள்ள 35ஆயிரம் பேருக்கும், வெளி ஊர்களிலுள்ள 15ஆயிரம் பேருக்குமாக மொத்தம் 50 ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிக்கின்றன.
பள்ளிவாசலின் அழகையும், பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கந்தூரி நிகழ்வின் காட்சிகளையும் ஊரிலுள்ள பெண்களும், பெரியவர்களும் சாரி சாரியாக வந்து பார்வையிடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பாரிய ஏற்பாடுகள்.

நீண்ட காலமாகப் பணரமைக்கப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளி வாசல் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
பராக்கிரம பாகு மன்னன் காலத்தில் இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம் பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும், வள்ளல் குணத்தினாலும் சுமார் ருபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இதன் நிர்மான வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்று(22) இப்பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கவுள்ளதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தெரிவித்தார்.
இதேவேளை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்றது போல் பாரிய கந்தூரி (அன்னதான நிகழ்வு) வும் இடம்பெறுவதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இன்று நிந்தவூரிலுள்ள 35ஆயிரம் பேருக்கும், வெளி ஊர்களிலுள்ள 15ஆயிரம் பேருக்குமாக மொத்தம் 50 ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிக்கின்றன.
பள்ளிவாசலின் அழகையும், பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கந்தூரி நிகழ்வின் காட்சிகளையும் ஊரிலுள்ள பெண்களும், பெரியவர்களும் சாரி சாரியாக வந்து பார்வையிடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.