அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 27 செப்டம்பர், 2012

அரச ஊழியர்களுக்கு 13, 432 ரூபா சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தல்



அரசாங்க ஊழியர்களுக்கு 13,442 ரூபா சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தவறினால் விரைவில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜே.வி.பி. சார்பான, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த, செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், தமது தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸாரை பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் பதில் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை தமது சங்கம் கோரும் எனத் தெரிவித்தார். ஏனெனில் இந்த போராட்டம் நியாயமானது என அவர் கூறினார்.

"உண்மையான தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளிக்கும்  என நாம் நம்புகிறோம். அரசாங்க அடக்குமுறைக்குப் பயந்து வாபஸ்பெறுவது அறிவார்ந்த நடவடிக்கை அல்ல. ஏனெனில், அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இதை செய்யமுயற்சிக்கிறது. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் வகையில் தொழிற்சங்கங்கள் தமது  பலத்தை வலுப்படுத்த வேண்டும்" என அவர் கூறினார்.

"2006 ஆம் ஆண்டின் பின்னர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம், 7069 ரூபாவையே படியாக அதிகரித்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 25,344 ரூபாவை செலவிட்டது. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின்படி, கடந்த மாதம், குடும்பமொன்றுக்கான செலவு 46,396 ரூபாவாக அதிகரித்தது.  எனவே தொழிலாளிகளின் அடிப்படை சம்பளத்திற்கும்,  வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுபடி வழங்கப்படாததன் நிலுவைக்கும் இடையிலான இடைவெளியை நிவர்த்திப்பதற்காக 13,442 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் என லால் காந்த கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter