(ஒலிந்தி ஜயசுந்தர) சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமமான தரத்தில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1978ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா தெரிவித்தார்.
எமது பல்கலைக்கழகங்களைப் பற்றியும் கல்விச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் பற்றியும் பாதகமான அறிக்கைகள் அண்மையில் வந்துள்ள போதிலும் கல்வி முறைமையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான தொலைநோக்கு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சிமன்றங்கள், மீன்பிடி அமைச்சு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவையும் கல்வி மீது செலவு செய்வதனால் இலங்கையில் கல்விக்கான ஒதுக்கீடு ஐந்து சதவீதத்திலும் கூடுதலானது என கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக