அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயார்: எஸ்.பீ


(ஒலிந்தி ஜயசுந்தர) 

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமமான தரத்தில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1978ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா தெரிவித்தார்.

எமது பல்கலைக்கழகங்களைப் பற்றியும் கல்விச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் பற்றியும் பாதகமான அறிக்கைகள் அண்மையில் வந்துள்ள போதிலும் கல்வி முறைமையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான தொலைநோக்கு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றங்கள், மீன்பிடி அமைச்சு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவையும் கல்வி மீது செலவு செய்வதனால் இலங்கையில் கல்விக்கான ஒதுக்கீடு ஐந்து சதவீதத்திலும் கூடுதலானது என கல்வி அமைச்சர் மேலும் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter