அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

நான் கொலைகாரன் இல்லை. என்னை நம்புங்கள்!


MS

களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அது தனிப்பட்ட காரணத்திற்காக செய்யப்பட்ட கொலை என நான் நம்புகின்றேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“களனி தொகுதி அமைப்பாளர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரினால் நான் தயாராகவே உள்ளேன்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் ஒழுக்கமிக்க கட்சியாகும். எனக்கு களனித் தொகுதியில் 25 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நான் களனி மக்களுக்கு செய்த சேவைகளை நன்கு அறிவர். இதனால் என்னால் களனி மக்களை மறக்க முடியாது.
நான் நீதி நியாயத்திற்காக போராடுபவன். நான் கொலைகாரன் இல்லை. என்னை நம்புங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

site counter