அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 23 மே, 2013

மஹிந்த சிந்தனையில் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை. - பிரதம அதிதி பியசேன எம்.பி –


மஹிந்த சிந்தனையில் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை.    
                           - பிரதம அதிதி பியசேன எம்.பி –
 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு ' மழலைகளுக்கான தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை ' ஒன்று நேற்று (20.05.2013) நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
நிந்தவூர் நனசல அறிவகத்தின் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான ஏ.புஆது தலைமையில் இடம் பெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், முதன்மை நிலைப் பயனறிவாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 75 சிறுவ,சிறுமியர்களும் ,அவர்களது பெற்றோர்களும் ,நனசல நிருவாகிகள் பலரும் இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடைபெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்ட சகல சிறுவர்களுக்கும் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளால் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டன.







site counter