மஹிந்த சிந்தனையில் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை.
- பிரதம அதிதி பியசேன எம்.பி –
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
.jpg)
நிந்தவூர் நனசல அறிவகத்தின் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான ஏ.புஆது தலைமையில் இடம் பெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், முதன்மை நிலைப் பயனறிவாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 75 சிறுவ,சிறுமியர்களும் ,அவர்களது பெற்றோர்களும் ,நனசல நிருவாகிகள் பலரும் இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடைபெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்ட சகல சிறுவர்களுக்கும் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளால் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டன.