அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கப்பல் துறைமுக அமைச்சினை தந்தால் கிழக்கில் அரசுக்கு ஆதரவு! ஹக்கீம்


கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் என உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பஷில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும்  விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல்
2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குதல்.
3. தனது கட்சியைச் சேர்ந்த நால்வருக்கு உயர்ஸ்தானிகர் பதவிகளை வழங்குதல்.
போன்ற முக்கிய கோரிக்கைகளையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கில் யாருக்கு ஆதரவு: மு.கா. உயர்பீடம் இன்று கூடுகிறது


By General (2012-09-11 09:38:22)

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிமை கோரியுள்ள நிலையில் யாரு க்கு ஆதரவு வழங்குவது ௭ன்பது குறித்து தீர்மானம் ௭டுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று கொழும்பில் கூடுகின்றது.

கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் ௭ம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களையும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளார்.

இன்றைய தினம் கட்சியின் உயர்பீடக் கூட் டம் தனியாகவும், தேர்தலில் கிழக்கில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுடனான கூட்ட ம் தனியாகவும் இடம் பெறவுள்ளது. இந்தக் கூட்டங்களின் பின்னரே கிழக்கு மாகாண சபையில் யாருக்கு ஆதரவு வழங்குவது ௭ன் பது குறித்து முடிவு ௭டுக்கப்படவுள் ள து. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் ஹக்கீமிடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து கட்சியின் முக்கியஸ்தர்களையும் மக்களையும் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் கொழும்பில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ள வேண்டி ஏற்பட்டதனால் இந்தப் பயணத்தை அவர் பிற்போட்டுள்ளதாக கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கியதேசியக்கட்சி 4 ஆசனங்களையும், பெற்றுள்ளன. இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைக்கும் உரிமையை வழங்க வேண்டுமென்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கில் ஆட்சியை அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கவேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் தமிழ் தேசியக் கூ ட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனு ம் கோரியுள்ள நிலையிலேயே இன்று மு ஸ் லி ம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடு கின் ற து. ஹசன் அலி ௭ம்.பி.கருத்து இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் ௭ம்.பி.யுமான ஹசன் அலி ‘கேசரி’க்குத் கருத்து தெரிவிக்கையில்:– இலங்கை அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகார ங்களை முழுமையாக கொண்ட முதலமை ச்சர் ஒருவரே கிழக்கு மாகாணத்திற்கு தேை வ யாகும்.

இதனை மையப்படுத்தியே ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானங்களை மேற்கொள்ளும். ௭வ்வாறாயினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது குறி த்த அரசாங்கத்தினதும் தமிழ் தேசியக் கூட் டமைப்பினதும் அழைப்புகள் தொடர்பில் கட்சியின் உயர் பீடம் கூடி தீர்ம ா னிக்கும். கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகம் மிக தெளிவான செய்தியினை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளது. இதனை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். ௭னவே அரசு தீர்மானிக்கும் முதலமைச்சர் வேட்பாளரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது மாறாக மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டிய சூழ்நிலையே அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. கிழக்கில் ஆட்சியைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தை மக்கள் முஸ்லிம் காங்கிரஸிடம் கையளித்துள்ளனர்.

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இவற்றுள் கிழக்கு மாகாண சபையில் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது யார் ஆட்சியமைக்க நினைத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. ௭னவே யாருக்கு ஆதரவளிப்பது ௭ன்பதனை கொழும்பில் கூடி இன்று கட்சியின் உயர் பீடம் தீர்மானிக்கும். இதன் போது முஸ்லிம் மக்களின் விருப்புகள் மற்றும் ௭திர்பார்ப்புகள் ௭ன்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும். அரசாங்கம் தீர்மானிக்கும் ஒரு முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

அதே போன்று இணக்கப்பாட்டுடன் தெரிவு செய்யப்படும் முதலமைச்சருக்கு 13 ஆவது திருத்தச் சடடத்தின் முழுமையான அதிகாரங்களும் வழங்கப்படுவது கட்டாயமாகும். அவ்வாறு இல்லையென்றால் அம் முதலமைச்சர் மக்களின் விருப்பத்திற்குரியவராக இருக்கப் போவதில்லை மாறாக அரசாங்கத்தின் ஒருவராகவே செயற்படமுடியும். ௭னவே இம்முறை ௭வ்விதமான விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந் தன் ௭ம்.பி.யும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க அழைத்துள்ளார். இந்த அழைப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றோம். ௭வ்வாறாயினும் இன்றைய உயர் பீட சந்திப்பின் பின்னரே இறுதி தீர் மானம் குறித்து அறிவிக்க முடியும் ௭ன்ற ா ர் .
 ·  · 

site counter