(எம்.எம்.ஏ ஸமட்)
நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி தலைமைக் காரியாலயம் அம்பாறை நகருக்கு இடமாற்றப்படுவதை கண்டித்து இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் விஷேட ஆட்சேபனைப் பிரேரனையொன்றை முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இப்பிரேரனை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இருப்பினும் அரச நிறுவனங்களின் எந்தவொரு தலைமைக் காரியாலயமும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், இற்றைக்குப் 17 வருடங்களுக்கு முன்னர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சித் தலைமைக் காரியாலயம் நிந்தவூரில் நிறுவப்பட்டது.