அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டனர்



மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைஇ பாவற்கொடிச்சேனை கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்ட முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். 

அத்துடன்இ இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர். 
இந்தப் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். 

தற்போது இந்தப் பள்ளிவாசல் மீளவும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட நிலையில்இ இராணுவத்தினரும் பொலிஸாரும் வழமை நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். 

இதேவேளைஇ நேற்று சனிக்கிழமை இந்தக் கிராமத்தில் கோடாரியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்மணியையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று பார்வையிட்டார். 

இதன்போது கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன்இ கே.எல்.எம்.பரீட்இ காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சாஇ நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter