By Afzal On Friday, Jan 24, 2014
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது
2ஆம் பிரிவு, காரியப்பர் வீதியைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மட் அப்சான்
என்ற 20 வயது நிரம்பிய இளைஞனின் சடலமே இது என அவரது உறவினர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த
21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப்
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த
இளைஞன் தொழில் வாய்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிற்கு
பயணிக்க இருந்தார் என்றும் இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
இரவு காணாமல் போனதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.