அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 28 மே, 2013

இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் ஊடகத் துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு.


இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் ஊடகத் துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு.
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
இலங்கைக்கான அமெரி;க்க நிலையத்தின் தகவல் ஊடகத்துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பொன்று அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
'உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்களின் சமூகத் தொடர்பாடல்களும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களும்' பற்றி இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் தகவல்.ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல், அமெரிக்க நிலைய தகவல் வள அதிகாரி லிண்டா பாக்கர், தகவல் வெளிக்கள அதிகாரி சாமினி சின்னையா ஆகியோருடன், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் பற்றி விரிவாக ஆராயப்பட்டதன் இறுதியில் இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க நிலையத்தின் தகவல், ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல் ' ஒவ்வொரு மாகாணங்களிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்குத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சிகளை நாம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இப்பயிற்சி நெறிகளில் திறமை காட்டும் ஊடகவியலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி வழங்கவும் யோசித்துள்ளோம்' எனவும் தெரிவித்தார்.






ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு வழங்கி கௌரவிப்பு


ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு  வழங்கி கௌரவிப்பு


ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு தனது சேவைக் காலத்தின் இறுதி நாளில் மாணவர்களால் நடாத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில் (23.05.2013) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ திருமதி. சுபைறா அலியாரிற்கு பரிசு  வழங்கி கௌரவிப்பதனைப் படத்தில் காண்க.
( படம்: ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.


இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.
       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரிலிருந்து இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சுலைமான் முகம்மட் ஸாபி வியாழனன்று இளைஞர் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சராகச் சத்தியப்பிரமானஞ் செய்து கொண்டார்.
இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சராகச் சத்தியப்பிரமானஞ் செய்து கொண்டு கடந்த (24) அன்று தனது சொந்த ஊரான நிந்தவூருக்கு வருகை தந்த அமைச்சர் சுலைமான் ஸாபியை நிந்தவூர் இளைஞர்களும், பொது மக்களும் மாலை அணிவித்து வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.இஸ்மத், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளான எம்.ஐ.எம்.பரீட் , எம்.எம்.ஹாறூன், இமாம் கஸ்ஸாலி வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைதீவு வெட்டாற்று முகப்பிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதேச செயலக வீதியை ஊடறுத்து,இமாம் கஸ்ஸாலி வீதிவழியாகச் சென்று மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலடியில் முடிவுற்றது.
தகவல்,மற்றும் ஊடக அமைச்சர் சுலைமான் முகம்மட் ஸாபி மஸ்ஜிதுல் ஜன்னாவில் இறைவழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தமது காரியாலயப் பணிகளில் ஈடுபட்டார்.





site counter