அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.
-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒரு கோடியே 60 இலட்சம் பெறுமதியான அன்பியுலன்ஸ் வண்டிகளும், 45 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.