( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் இன்று திடீர் பரிசோதனை நடாத்தப்பட்டதில் பாவனைக்கு உதவாத பல உணவுப்பொருட்கள் சிக்கியதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.