அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நிந்தவூரிலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை. -பாவனைக்கு உதவாத பலஉணவுப் பொருட்கள் சிக்கின-

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் இன்று திடீர் பரிசோதனை நடாத்தப்பட்டதில் பாவனைக்கு உதவாத பல உணவுப்பொருட்கள் சிக்கியதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உணவு வழங்குமிடங்களிலும், விற்பனை நிலையங்களிலும் கைப்பற்றப்பட்ட ( பாவனைக்கு உதவாத) பல உணவுப் பொருட்கள், பிரதேச சபைக்குச் சொந்தமான ரக்டர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் ' எமது மேற்பார்வையின் போது பல உணவு வழங்குணர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். பலருக்கு சட்ட நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளோம். இன்னும் சிலர் எமது நடவடிக்கையின் போது தமது நிலையங்களைத் திடீரென்று பூட்டியுள்ளனர். அவர்களின் தயாரிப்புக்களில் தவறு உள்ளதால்தான் அவர்கள் அவ்வாறு பயத்தில் பூட்டியுள்ளனர். எனவே அவர்களையும் விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter