அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 18 ஜனவரி, 2014

நிந்தவூர் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் முயற்சிக்கு அமைச்சர் டலஸ் ஆப்பு!


-சஹாப்தீன், எம்.ஐ.பைஷால்-
images (1)நிந்தவூரில் சுமார் 17 வருடங்களாக இயங்கிவரும் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்றும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன்அலி மற்றும் பைசல் காசிம் எம்.பிக்கள் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, தனக்கு தெரியாமல் இவ்வலுவலகத்தை இடமாற்ற தொடர்ந்தும் முயற்சித்து வரும் உயரதிகாரிகள் தொடர்பில் விசமடைந்ததுடன், இவ்வாறான நடவடிக்கைகளை உடன் கைவிடுமாறும் பணிப்புரை விடுத்தார்.
இந்த அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்றுமாறு அதன் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும் தமிழ் பேசும் மக்களின் சொத்தாக கருதப்படும் இதனை சிங்கள பகுதிக்கு மாற்றும் சதித்திட்டத்தை கல்வி சமூகமும் நலன் விரும்பிகளும் கடுமையாக எதிர்த்தனர்.
இதனையடுத்து மு.கா.தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி மற்றும் பைசால் காசீம் எம்.பி. ஆகியோர் இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை சந்தித்து இது குறித்து கலந்துரையாடினர். இந்த அலுவலகம் நிந்தவூரில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அமைச்சர் டளஸ், அது அம்பாறைக்கு மாற்றப்படாது என்று அன்று வாக்குறுதி அளித்தார்.
இருப்பினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் அதிகார சபை தலைமையகத்தால் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனை காரணம் காட்டி, உடனடியாக அலுலகத்தை அம்பாறைக்கு கொண்டு சென்றுவிட மாவட்ட உதவிப் பணிப்பாளர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டது மட்டுமன்றி, எதிர்வரும் வியாழக்கிழமை அனைத்து ஊழியர்களும் அம்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பமிட வேண்டும் என்று எஸ்.எம்.எஸ். ஊடாக அறிவித்திருந்தார். இச்சிக்கல்நிலை குறித்து மு.கா. குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்படி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஹசன் அலி எம்.பி. விபரிக்கையில்;
‘நீங்கள் வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு கொண்டு செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எவ்வாறு? என்று அமைச்சர் டளஸிடம் கேள்வியெழுப்பினோம்.
உதவிப் பணிப்பாளர் அம்பாறையில் ஒப்பமிட்டுள்ளதுடன் ஏனைய ஊழியர்களையும் 16ஆம் திகதி வருமாறு அறிவித்துள்ளார். அதற்கு ஆதாராமாக பணிப்பாளர் அனுப்பிய குறுந்தகவலை ஆதாரமாக காட்டினேன். இதனை கேட்ட அமைச்சர் டளஸ், இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தனக்கு தெரியாது எனவும் இது தனது உத்தரவை மீறிய செயல் என்றும் கூறி ஆத்திரப்பட்டார்.
இப்பிரச்சினை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க தான் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் தனது உத்தரவை மீறி தான்தோன்றித்தனமாக செயற்படுபட வேண்டாம் என்றும் கண்டித்தார்.
அதேவேளை, முன்னர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அவ் அலுவலகம் நிந்தவூரிலேயே இருக்கும் என்று உறுதியளித்தார். அதனை ஆலோசனைக் குழுவும் அங்கீகரித்தது.

Source: Metro Mirror

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter