அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 டிசம்பர், 2012

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் வீதி மறியல் போராட்டம்; நுரைச்சோலை வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!


D003300220011223

-செயிட் ஆஷிப்-
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்றது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமலாமல் அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இன்று காலை 9.30 மணி தொடக்கம் வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுனாமி இடம்பெற்று எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமக்காக அமைக்கப்பட்ட வீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தமக்காக சவூதி அரேபியாவின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கடந்த மூன்று வருடமாக பாழடைந்த நிலையில் கிடக்கிறது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்தும் அவ்வீடுகள் தமக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக்கோரியுமே தாம் வீதியில் இறங்கிப் போராடுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
தமக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு வந்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கர்ஜித்தனர்.
இந்த ஆர்ப்பாடம் மற்றும் வீதி மறியல் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை உரிய மக்களுக்கு இனியும் தாமதிக்காமல் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள் (படங்கள்)


(எம்.பைஷல் இஸ்மாயில் + ஏ.எல்.எம்.மஸ்காத் + கே.சி.எம் அஸ்ஹர்)


அக்கரைப்ற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்களினால் நடாத்தப்பட் ஆா்ப்பாட்டத்தில் மக்களினால் எடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை 26-12-2012) அம்மக்களினால் பாரிய ஆா்ப்பாட்டத்தை நடாத்தினா். 

கடந்த சுனாமியின் போது வீடுகளை இழந்த குடும்பத்த தலைவா்கள் அக்கரைப்பற்று நுரைச்சோலை தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இதுரை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், வழங்குமாறு கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்ட பேரணியினையில் பொலிஸார் அதை தடுக்க முற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டு பல கருத்து மாற்றங்களும் இடம்பெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமார் 2 மணித்தியாலங்களாக அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதான வீதியினூடாக வாகனம் செல்லாமல் தடைப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது. 







பௌத்த விகாரையில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பிக்குவுக்கு சிறை


(vi) சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தமையினால் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பாக முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்க்கிறது - அஸாத் சாலி


"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும்,  ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என்று முஸ்லிம்  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

முஸ்லிம்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால்  முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்?  எதற்காகத் தாக்கப்பட்டனர்?

"சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை. 

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும்,  எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார். 

எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா?
 இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது. 

அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். 

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம்  என்றார் அஸாத் ஸாலி.

site counter