இம்மாநாட்டில் நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் எஸ்முத்துமீரான் (சிரேஸ்ட சட்டத்தரணி, சிரேஸ்ட இலக்கியவாதி) தலைமையிலான கவிஞர் டொக்டர் ஜாபீர், கவிஞர் சிரேஸ்ட பொறியியலாளர் இஸ்மாயில், இலக்கியவாதி அன்வர்டீன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
திங்கள், 3 மார்ச், 2014
அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 8 வது மாநாடு - 2014
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் விசேட பயிற்சியை முடித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.-பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி-

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயிலின் வழிகாட்டுதலில் இவ்வளாக கலை, கலாச்சார பீடம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பயிற்சியை முடித்துக் கொண்ட 150 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (01.03.2014) இ;ப்பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)