நிந்தவூரில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த தொழிற்பயிற்சி அதிகார
சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 16
வருடங்களாக மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் அதனோடிணைந்த மாவட்ட நிர்வாக
அலுவலகமும் செயற்பட்டு வந்தது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர்
எம்.எச்.எம். அஷ்ரஃபின் அயராத முயற்சியால் ஒரு அரச நிறுவனத்தின் மாவட்ட
தலைமை அலுவலகம் கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. அதன்படி, அம்பாறை
நகருக்கு வெளியே கரையோர பிரதேசத்தில் அமையப்பெற்ற ஒரிரு மாவட்ட நிர்வாக
அலுலகங்களில் ஒன்றாக இது செயற்பட்டு வருகின்றது.
|
சனி, 18 ஜனவரி, 2014
தொ.ப. அ. சபையின் நிந்தவூர் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு மாற்ற முயற்சி
நிந்தவூர் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் முயற்சிக்கு அமைச்சர் டலஸ் ஆப்பு!
-சஹாப்தீன், எம்.ஐ.பைஷால்-
நிந்தவூரில் சுமார் 17 வருடங்களாக இயங்கிவரும் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்றும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)