அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி அமெரிக்க உயர் அதிகாரியிடம் விளக்கம்!



கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நீதித்துறையின் பங்களிப்புப் பற்றி நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளல் கலாநிதி அலைஸ்ஸா அய்ரஸ் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்தார்.
நீதியமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிசோன், அரசியல் விவகார ஆலோசகர் மைக்கல் ஹொனிங்ஸ்டீன் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமிலினி டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், முன்னர் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்தும், மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் விளக்கிக் கூறினார்.
இலங்கையின் செயல்திறன் மிக்க நீதித்துறை பற்றியும், நம்பகமான நீதித்துறை வழிமுறைகள் பற்றியும் அமைச்சர் மேலும் விளக்கினார். ஊடக சுதந்திரம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அதன் சில முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் அமைச்சர் ஹக்கீம் எடுத்துக் கூறினார்.
பிணக்குகளுக்கு தீர்வு காணும் மாற்றுப் பொறிமுறை பற்றி அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாபிக்கும் போது கிராம மட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இணக்கச் சபைகளின் ஊடாக நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்குகளின் எண்ணிக்கையை கணிசமான எண்ணிக்கையில் குறைப்பதற்கு முடிந்திருப்பதோடு, வழக்குத் தாமத்தையும், கால விரயத்தையும் அதன் விளைவாக ஏற்படும் வீண் செலவுகளையும் குறைக்க முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்தப்பொறிமுறை 65 சதவீதம் வெற்றியளித்திருப்பதாகவும், யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவும் சூழ்நிலையில் மத்தியஸ்த சபைகள் எனப்படும் இணக்க சபைகளின் செயற்பாட்டை நாட்டின் வடகிழக்கு மாகாணங்களுக்கும் விஸ்தரிக்க முடிந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படும் பரந்துபட்ட இணக்க சபைகளின் நடைமுறையை பின்பற்றுவதற்கு ஏற்கனவே நேபாளம், சீனா போன்ற நாடுகள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், காணி, நிலபுலன்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரங்களிலும் இணக்க சபைகளை ஈடுபடுத்தி நிலவுடமையாளர்களுக்கு நீதி நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க நீதிமன்றங்களுக்கு வெளியிலான சட்டரீதியான செயல்பாட்டின் சாத்தியக் கூறுகள் பற்றியும் நீதியமைச்சு ஆராய்ந்து வருவதாகவும், காணி பிரச்சினைகள் பற்றிய பிணக்குகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இணக்க சபைகளில் கடமையாற்றும் சுயேட்சையான ஊழியர்களுக்கு காணி உறுதிகள் மற்றும் வரைபடங்கள் தொடர்பான பயிற்சியை வழங்குவது பற்றியும் தாம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்துக் காணப்படும் சட்ட விரோத ஆட்கடத்தல் பற்றியும், குறிப்பாக இலங்கையின் வடமேல் மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து களவாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வள்ளங்களில் செல்லும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் பற்றியும், அதனை தடுத்து நிறுத்த கையாளப்படும் நடைமுறைகள் பற்றியும் அதற்கு இரகசிய பொலிசார் உட்பட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் வழங்கி வரும் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சர் விளக்கினார்.
பயனுள்ள கருத்துப் பறிமாறலில் ஈடுபட்ட அமைச்சருக்கும், அதற்கு ஒத்துழைப்பு நல்கியை அமைச்சின் செயலாளருக்கும் அமெரிக்க பதில் பிரதிச் செயலாளர் மற்றும் தூதுவர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter