அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

துப்பாக்கி ஏந்திய சிறுவர்களை புத்தகப் பை தூக்கச் செய்துள்ளோம்: நாமல் ராஜபக்ச


துப்பாக்கி ஏந்திய சிறுவர்களை புத்தகப் பை தூக்கச் செய்துள்ளோம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்கள் திருப்தி அடைய வேண்டும். நாட்டின் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமிய பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணனி ஆகிய பாடங்களை கற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் நாட்டின் சகல மாணவ மாணவியருக்கும் மடிக் கணனிகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளிலும் பழைய மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter