அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

இறைத்தூதரை அவமதித்து வெளியாகிய திரைப்படத்திற்கு எதிராக நிந்தவூரில் மாபெரும் எதிர்ப்பு கண்டன பெரணி


முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் நாடு பூராகவும் கண்டன அமைதி ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும், இடம்பெற்றதுடன், ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் அணைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கண்டனப்பேரணி இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் பிரதான வீதியினாடாகச் சென்று நிந்தவூர் பிரதேச செயலாளரிடம் கண்டன அறிக்கை அடங்கிய மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சுமார் 5000 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு அமெரிக்க ஜனாதிதபதியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

















இந்த மிக பிரமாண்டமான ஆர்ப்பாட்டப்பேரணியில் கல்முனைப் பிரதேச வாழ் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டனர். அத்துடன் கொடுங்கோலர்களுக்கு எதிராக துஆப் பிரார்த்தனையும் அங்கு இடம்பெற்றது.

site counter