கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோன்னதமான பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்.
-கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் புகழாரம்-
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
.jpg)
நேற்று முதல் நாள் சம்மாந்துறை தேசியக் கல்லூரியில் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற 'ஆரம்பக் கல்வி அபிவிருத்தி' தொடர்பான மாநாட்டில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.