அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோன்னதமான பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும். -கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் புகழாரம்-


கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோன்னதமான பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்.
                    -கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் புகழாரம்-
                 (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோண்ணதமான ஆசிரியப்பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் சமூகத்ததால் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள். எல்லாத் தொழில்களுக்கும் மேலான அந்தஸ்தைக் கொண்ட ஆசிரியத் தொழிலைப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகளாவர்' என்று கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நேற்று முதல் நாள் சம்மாந்துறை தேசியக் கல்லூரியில் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற 'ஆரம்பக் கல்வி அபிவிருத்தி' தொடர்பான மாநாட்டில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

site counter