அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 செப்டம்பர், 2012

பலஸ்தீன மக்களின் துன்பங்கள் குறித்து இலங்கை விசனம்



ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 21 ஆவது அமர்வின்போது, பலஸ்தீனர்கள் முகங்கொடுத்துவரும் துன்பங்கள் தொடர்பாக இலங்கை தன் விசனத்தை தெரிவித்ததாக ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
'பலஸ்தீனம் மற்றும் வேறு ஆக்கிரமிக்கப்பட்ட அரபு ஆட்புலங்களில் மனித உரிமை நிலைமைகள்' என்னும் தொனிப்பொருளிலான அமர்வின்போது, பலஸ்தீன மக்கள் முகங்கொடுக்கும் பெரும் துன்பங்கள் பற்றிய விசனத்தை இலங்கை வெளிப்படுத்தியது.

பலஸ்தீன மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை இலங்கை எப்போதும் பரிந்துரைத்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை, இஸ்ரேலுக்கு சமாந்தரமாக நாடொன்றை அமைப்பதற்கான பலஸ்தீனர்களின் நியாயமான போரட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியது.

சாதாரண மக்களின் வாழ்வின் மீது, அதிலும் குறிப்பாக சிறுவர், இளைஞர்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் காஸா மீதான தடைகளை பாதுகாப்பு சபை தீர்மானம் 1860 இற்கு அமைய, இஸ்ரேல் அகற்ற வேண்டுமென இலங்கை வலியுறுத்தியது. விரைவில் ஐக்கிய நாடுகளில் உள்ள நாடுகளில் ஒன்றாக பலஸ்தீன அரசு ஆகுமென நம்பிக்கையையும் இலங்கை வெளிப்படுத்தியது'.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் குண்டு தாக்குதல்கள்


கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும்  கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின்  சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
Source-tamilmirror

மீண்டும் கூகிளை சாடுகிறார் அமைச்சர் விமல்


உலகெங்கும் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்த, இஸ்லாத்தை அவமதிக்கும் ‘இன்னோசன்ஸ் ஒவ் முஸ்லிம்ஸ்’ எனும் படத்தை விநியோகிக்கப்பட்டமைக்கு கூகிள் தேடல் இணையத்தளம் பொறுப்பு என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
இணைய தேடல் இயந்திரமான கூகிள் தளத்தை அமெரிக்க அதிகாரிகள் நெறிமுறைகளை மீறி தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இயக்குவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தினார்.
உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார். இலங்கையிலுள்ள பாவனையாளர்கள் கூகிளில் மேற்படி படத்தை பார்க்க முடியாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தணிக்கை செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார்.

மாகாண அமைச்சர் மன்சூருக்கு சம்மாந்துறையில் மகத்தான வரவேற்பு!



(அஸ்ரின் முஹம்மட், ஏ.எல்.அமீர்)
கிழக்கு மாகாண சுகாதார, இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சூர், தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தபோது அவருக்கு போது மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
சத்தியப் பிரமாண வைபவத்தை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த மாகாண அமைச்சர் மன்சூர் சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியில் வரவேற்கப்பட்டதுடன் அங்கிருந்து அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் பெருந்திரளான ஆதரவாளர்களும் பொது மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் மன்சூர்;
“எனக்கு இப்பதவியை வழங்க சிபாரிசு செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உச்சபீட உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.
எனது தகுதிக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற முறையில் கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவியின் மூலம் உச்ச அளவில் கிழக்கு மாகாண மூவின மக்களுக்கும் சமனான முறையில் பேதமின்றி பணிபுரிவேன்.
அதற்காக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை கோரவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

கண்டி மாநகர எல்லைக்குள் ஆடு, மாடு அறுப்பதற்கு தடை!


கண்டி மாநகர சபை எல்லைக்குள் இறைச்சிக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்பதனை தடை செய்ய கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

site counter