அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 செப்டம்பர், 2012

மாகாண அமைச்சர் மன்சூருக்கு சம்மாந்துறையில் மகத்தான வரவேற்பு!



(அஸ்ரின் முஹம்மட், ஏ.எல்.அமீர்)
கிழக்கு மாகாண சுகாதார, இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சூர், தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தபோது அவருக்கு போது மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
சத்தியப் பிரமாண வைபவத்தை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த மாகாண அமைச்சர் மன்சூர் சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியில் வரவேற்கப்பட்டதுடன் அங்கிருந்து அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் பெருந்திரளான ஆதரவாளர்களும் பொது மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் மன்சூர்;
“எனக்கு இப்பதவியை வழங்க சிபாரிசு செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உச்சபீட உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.
எனது தகுதிக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற முறையில் கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவியின் மூலம் உச்ச அளவில் கிழக்கு மாகாண மூவின மக்களுக்கும் சமனான முறையில் பேதமின்றி பணிபுரிவேன்.
அதற்காக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை கோரவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter