(அஸ்ரின் முஹம்மட், ஏ.எல்.அமீர்)
கிழக்கு மாகாண சுகாதார, இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சூர், தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தபோது அவருக்கு போது மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
சத்தியப் பிரமாண வைபவத்தை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த மாகாண அமைச்சர் மன்சூர் சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியில் வரவேற்கப்பட்டதுடன் அங்கிருந்து அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் பெருந்திரளான ஆதரவாளர்களும் பொது மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் மன்சூர்;
“எனக்கு இப்பதவியை வழங்க சிபாரிசு செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உச்சபீட உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக