அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 செப்டம்பர், 2012

பலஸ்தீன மக்களின் துன்பங்கள் குறித்து இலங்கை விசனம்



ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 21 ஆவது அமர்வின்போது, பலஸ்தீனர்கள் முகங்கொடுத்துவரும் துன்பங்கள் தொடர்பாக இலங்கை தன் விசனத்தை தெரிவித்ததாக ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
'பலஸ்தீனம் மற்றும் வேறு ஆக்கிரமிக்கப்பட்ட அரபு ஆட்புலங்களில் மனித உரிமை நிலைமைகள்' என்னும் தொனிப்பொருளிலான அமர்வின்போது, பலஸ்தீன மக்கள் முகங்கொடுக்கும் பெரும் துன்பங்கள் பற்றிய விசனத்தை இலங்கை வெளிப்படுத்தியது.

பலஸ்தீன மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை இலங்கை எப்போதும் பரிந்துரைத்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை, இஸ்ரேலுக்கு சமாந்தரமாக நாடொன்றை அமைப்பதற்கான பலஸ்தீனர்களின் நியாயமான போரட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியது.

சாதாரண மக்களின் வாழ்வின் மீது, அதிலும் குறிப்பாக சிறுவர், இளைஞர்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் காஸா மீதான தடைகளை பாதுகாப்பு சபை தீர்மானம் 1860 இற்கு அமைய, இஸ்ரேல் அகற்ற வேண்டுமென இலங்கை வலியுறுத்தியது. விரைவில் ஐக்கிய நாடுகளில் உள்ள நாடுகளில் ஒன்றாக பலஸ்தீன அரசு ஆகுமென நம்பிக்கையையும் இலங்கை வெளிப்படுத்தியது'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter