அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 செப்டம்பர், 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் குண்டு தாக்குதல்கள்


கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும்  கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின்  சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
Source-tamilmirror

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter