அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு -- மருத்துவ டிப்ஸ் !!!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு -- மருத்துவ டிப்ஸ் !!!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்
கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''

நன்றி
பரமக்குடி சுமதி

இவருக்கு தண்டனை வழங்க முடியாதாம்..!


பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் தலைவராகவும் அதிபராகவும் இருப்பவர் ஆசிப் அலி சர்தாரி. அதிபர் பதவி வகிப்பவர் அரசியல் கட்சியை சாராதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சமின்றி செயல்பட முடியும். எனவே, கட்சி பதவியை அவர் ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி லாகூர் ஐகார்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கட்சி பதவியை ராஜினாமா செய்ய கடந்த ஆண்டு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கட்சி தலைவர் பதவியில் இருந்து சர்தாரி ராஜினாமா செய்யவில்லை.

இதை தொடர்ந்து அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லாகூர் ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் கூறுகையில், ' நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. எனினும், அதிபர் பதவிக்கே உரித்தான சில சலுகைகள், அதிகாரங்கள் சட்டப் பிரிவு 248 (2)ன் படி சர்தாரிக்கு இருப்பதால், அவரை தண்டிக்க முடியாதுÕ என்று உத்தரவிட்£ர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.கே.தோகர், 'அப்படியானால், அதிபர் பதவி வகிப்பவர், யாரையாவது கொலை செய்து விட்டால் அப்போது என்ன நடக்கும்' என்று கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளியில் சண்டை என்றாலும் சாப்பாட்டு மேசையில் ஒற்றுமையோ ஒற்றுமை!




பட்ஜெட் விவாத நிறைவைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சுவாரிஸ்யமாக பேசி மகிழ்ச்சியுடன் அளவளாவுவதை இங்கு காணலாம்.

சியோனிசத்திற்கு எதிராகவே போராடுகிறோம் - ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடோம்..!




(tn) எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் காசா விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் முன் தெரிவித்தார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பங்கேற்ற பேரணியில் ஆவேசமாக உரையாற்றிய காலித் மிஷால், பலஸ்தீனர்கள் ஒரு துண்டு நிலத்தையும் இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றார். “பலஸ்தீனம் எமது தேசம் (மத்தியதரை) கடல் முதல் (ஜோர்தான்) ஆறு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை எனவே அதன் ஒரு துண்டுப் பாகத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. 

நாம் சியோனிஸத்திற்கு எதிராகவே போராடுகிறோம். யூதர்களுக்கு எதிராகவல்ல. எமது நிலத்தை ஆக்கிரமித்தோருக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். போராட்டத்தின் கனியாக எமக்கு தனிநாடு கிடைக்கும். அது பேச்சு வார்த்தை மூலம் ஏற்படக் போவதில்லை” என்றும் காலித் மிஷால் குறிப்பிட்டார். 

இந்த பேரணியில் முகத்தை மூடியவாறு உரையாற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர், “இஸ்ரேலுடனான மோதலின் போது நாம் எமது 10 வீதமான திறனையே வெளிப்படுத்தினோம்” என்றார்.

இஸ்லாமிய தலைமைகள் விழித்து கொண்டுதான் தூங்குகிறது..!


(பாஜி)

மனித இனம் நேசிக்கின்ற உலகம் அழிந்து விடப்போகிறது. மனிதன் வயதுகடந்து நோயுற்று தளர்ந்து போவதுபோல் பூமி பந்து  தளர்த்தி விடப்பட்டுள்ளது.

மனித இனத்தின் அறுவடைக்காலம் தொடங்கிவிட்டது. நல்லவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள்  கெட்டவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள். பல மசூதிகள் உடைக்கப்பட்டது. பல மசூதிகள்  உடைக்கபடுகிறது .பலமசூதிகள் உடைக்கப்படும். பனிமலையும்  எரிமலையும் உருகி சிலதேசம் புதைந்து விடலாம்.அமைதி எப்போது என்று தெரியாது ஆயினும்  விசுவாசிகளுக்கு ஒதுங்கி கொள்ள நேரம் இல்லை சத்தியத்தை  நிலைநாட்டும் போரை தொடர வேண்டும். சிலர் இஸ்லாதின்  உள்ளே வருகின்றனர்.சிலர் வெளியே போகின்றனர்.  

பல பாதைகள் திறக்கப்பட்டுள்ளது சிலரின் பாதையில் உலகம் பேரின்பமாய் விரிந்து கிடக்கிறது .இருதயம் நாகரீகத்தின் கோரத்தாண்டவத்தில் மரக்கட்டையாய் அள்ளுண்டு போகிறது. சிலருக்கு வழங்கும் உபதேசம் எல்லாம் ஓட்டை விழுந்த பாத்திரத்தில் நீர் நிரப்புவது போலதான். சிலசமயங்களில் மூடிய பாத்திரத்தில் நீர்நிறைப்பது போலதான். புறத் தோற்றத்தில் அலங்கரிக்கும் தாமரை தடாகமாய்  மாறிவிடுகின்றார்கள். அது ஒரு நீர் வாழ் தாவரம் ஆயினும் அதன் இலையின் உட்புறம் நீரில் ஒட்டாமல் இருப்பதுவாய் பலரின் இருதயம் ஈமானில் பினைக்கபடவில்லை.பரம்பரை இஸ்லாம் அவ்வளவுதான். 

ஸியோனிஸ ,உலக மயமாக்கல் அதிகமானவர்களை  உந்தி தள்ளி நரகத்தின் எல்லைக்கு நகர்த்துகிறது.உண்மையில் அதிகமானவர்கள்  இரண்டாம் நிலை வியாபாரி முதலாளி அல்ல.அறிவியல் துறைக்கு மூலதனம் இடாததால் இஸ்லாமிய தேசத்தின்  மண்டைக்குள் யூதனின் மூளை நுழைந்தது.  ராஜதந்திர உறவு என்றபெயரில் இஸ்லாமிய ராஜ்யம் வெட்டிப் பிளக்கப்படுகிறது.

பல இஸ்லாமிய தலைமைகள் விழிதுத்து கொண்டுதான் தூங்குகிறது.  எப்படி தட்டியெழுப்ப முடியும். சிலரின் இருதயத்தை பற்று எனும் புற்று நோய் தாக்கிவிட்டது. சியோனிஸ போதைக்குள் மூழ்கிய முஸ்லிம் தலைமைகள் மூச்சு திணறியது. இன்னும் காத்துக்கிடக்கிறது.

வேகமாக கலவரத்துடன் நகருகின்ற காலம் சொல்லுகின்ற சேதி உலகம் தன் இறுதி பயணத்தை தொடருகின்றது என்பதுதான்.    

இறவனின் படைப்புக்கள் புறப்பட்டுவிட்டது. விஞ்ஞானம் இனி தடுமாறி தலைகுனியப்போகிறது. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் பல விசித்திரங்கள் காத்துக்கிடக்கிறது. அவற்றுக்கு பெயரிடும் பட்டியலை விஞ்ஞானம் தொடங்கி இருக்கிறது

இஸ்லாமிய உலகம் தலைமைத்துவ மாற்றத்தை கோரி நிற்கின்றது. தனிப்படவர்களின் மாற்றங்கள்தான் தலைமைதுவமாற்றம்.    

அதிகமான முஸ்லீம்கள் சத்தியத்தில் இருந்து வெகுதூரம் சென்று விட்டார்கள்.பெரும்பான்மையானவர்களிடையே சத்தியம் சேர்வதில் இருக்கின்ற தடைகள் பெரும் சவாலாகும் அல்லாஹுவின் கட்டளை எதுவாகவும் இருக்கலாம். ஆயினும் ஈமானில் உறுதியாக இருக்க முஸ்லீம்கள் அதிகபட்சம் முயற்சி செய்யவேண்டி இருக்கிறது.இதுதான் கோடிட்டு காட்டப்படவேண்டிய  விடயம் 

எதிரியால் விதியென்று உயிரின் வேர் அறுந்து உடல் சாய்கின்ற பொழுது இறுதி மூச்சு ஏகத்துவத்தோடு பிரியட்டும். சிந்தும் குருதி ஊன் நீரன்றி சுவர்க்கத்தின் சிவப்பு கம்பளமாகட்டும். அமைதி எப்போது என்று தெரியாது. ஆயினும்  விசுவாசிகளுக்கு ஒதுங்கிக்கொள்ள நேரம் இல்லை சத்தியத்தை  நிலைநாட்டும் போரை தொடர வேண்டும்...!! 

நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க வலியுறுத்தி சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்றவிசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை ஆராய்வதும் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க வலியுறுத்தி எதிர்வரும் புதன்கிழமை ஒரு மணித்தியாலம் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்ற பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற குழுவினர் நேற்று தமது பணிகளை நிறைவுறுத்தியிருந்தனர்.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுகளில், 5 விசாரிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 தொடர்பில் பிரதம நீதியரசர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதேவேளை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பல் எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் உயர் நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

வலிப்பு வியாதி ஸம்ஸம் நீரினால் குணமானதால் இஸ்லாத்தை தழுவிய சிங்களப் பெண்!


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி ‘சம்சம்” நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
ராஜூ என்ற அந்த சிங்களப் பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைக்குலைத் திருடனுக்கு வழங்கும் உரிமை கூட பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட வில்லை!


வாழைக்குலைக் கள்வனுக்கு வழங்கும் உரிமை கூட எமது பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“வாழைக்குலைத் திருடனுக்கும் விடுதலைக்கான காரணம் கேட்கப்படுவதே சட்டத்துறையின் வழக்கம்.
ஆனால் எமது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு பற்றி அவரது விடுதலைக்கான காரணங்களை முன்வைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வில்லை.
இது பிரதம நீதியரசர் மீதான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

களுவாஞ்சிக்குடியில் டைனமோ இன்றி செலுத்தப்பட்ட 100 சைக்கிள்கள் பொலிஸாரின் பிடியில்!


களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பொலிஸார் விசேட செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய இரவு வேளையில் மின்னொளியின்றி செலுத்தப்படும் சைக்கிள்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 100 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அதேவேளை சைக்கிள் உரிமையாளர்களால் டைனமோக்கள் பொருத்தப்பட்ட பின்னர் அவற்றை படிப்படையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு வேளையில் மின்னொளியின்றி செலுத்தப்படுகின்ற சைக்கிள்கள் காரணமாகவே களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிக விபத்துக்கள் இடம்பெற்றமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு கைப்பற்றப்பட்ட சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது, எனினும் தொடர்ந்து மின்னொளியின்றி இரவு வேளையில் சைக்கிள்கள் செலுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

site counter