.jpg)
நிந்தவூர் பிரதான வீதியில் ( பிரதேச செயலகத்திற்கு முன்னால்) இன்று(17) காலை இடம் பெற்ற அகோர வாக விபத்தில் அக்குறஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிர் நீத்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றித் தெரிய வருவதாவது:
அக்குறஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களான நிப்றாஸ்( வயது 22), றினாஸ்(வயது 22) ஆகிய இருவரும் அக்கரைப்பற்றிலுள்ள தமது உறவினரைச் சந்திப்பதற்காக ஆட்டோவில் நிந்தவூர் ஊடாக வரும் வழியில் எதிரே வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதுண்டதனால் இவ் அகோரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது எனத் தெரிய வருகிறது.
இதில் ஒருவர் ஸ்தலத்திலேயே மறணித்துள்ளார். மற்றயவர் கல்முனை அஸ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு மறணித்தார்.