(ஏ.எம்.ஆஷிப், பி.முஹஜிரீன்)
நிந்தவூர் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முஸ்லிம் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அக்கறைப்பற்று- கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் வெட்டுவாய்க்கால் பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அதேவேளை முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் காலித் இர்ஷான் (வயது 22), முஹம்மட் ரினாஸ் (வயது 22) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இதனைத் தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக