(பழுளுல்லாஹ் பர்ஹான்)
நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மணியளவில் இலங்கையின் 3வது நீளமான மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பொதுமக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடிந்த வண்ணம் காணப்படுகின்றன.
குறித்த பாலம் திறந்து வைக்கப்படுவதனால் இதுவரையில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கி வந்த போக்குவரத்து நெரிசல் இல்லாது போய் போக்குவரத்து இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.