அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 21 மார்ச், 2013

கல்லடி புதிய பாலம் நாளை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படுகிறது (படங்கள்)

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மணியளவில் இலங்கையின் 3வது நீளமான மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பொதுமக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடிந்த வண்ணம் காணப்படுகின்றன.

குறித்த பாலம் திறந்து வைக்கப்படுவதனால் இதுவரையில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கி வந்த போக்குவரத்து நெரிசல் இல்லாது போய் போக்குவரத்து இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter