- யு.கே.காலிதீன் -
மேற்படி ஹர்த்தாலையொட்டி இப்பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
‘முகமது
நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான
வன்முறைகளை நிறுத்து’ போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு நூற்றுக்கணக்கானோர்
கலந்து கொண்டனர்
இதனையடுத்து பிரதேசத்தின் கடைகள் வங்கிகள்,
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன்
பயணிகள் போக்குவரத்துகள் எதுவும் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடிக்
காணப்பட்டது. அத்துடன் அவ்வார்ப்பாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியின்
கொடும்பாவி இழுத்துச் சென்று அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை
எரித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்
பிரதேசங்களான சம்மாந்துறை சாய்ந்தமருது கல்முனை மாளிகைக்காடு மருதமுனை ஆகிய
பிரதேசங்களில் ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் எந்த வித வன்முறைகளும் இல்லாமல்
அமைதியான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.