அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 31 மார்ச், 2014

நிந்தவூர் கடற்கரைப்பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இறந்த நிலையில் மீட்பு

ஏ.புவாது

நிந்தவூர் - 09 கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் நிந்தவூர் 11 இமாம் கஸ்ஸாலி வீதியைச்சேர்ந்த செய்யது இப்றாஹீம் முஹம்மது பாஹீர் என சம்மாந்தறைப் பொலீசாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவருக்கு 2 திருமணங்கள் என்றும் முந்தய திருமணத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்கரைப்பற்று குவாசி நீதிமன்றத்திற்கு சென்றுவந்த நிலையில் நஞ்சருந்தி மரணித்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்


ஏ.புவாது 

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயலில் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேர்னல் பிரிகேடியர் எச்.எம். பீரிஸ் அவர்கள்  கலந்துகொண்ட சர்வமத தலைவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று கடந்த சனிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட சர்வ மத நல்லிணக்கம் தொடர்பாகவும்  ஆராயப்பட்டது.
அத்தோடு திருக்கோயில் சங்கமன்கண்டிய கோயில் மலைப் பிரதேசத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு மக்கள் வழிபடுவதற்கான தடையை ஆராய்ந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை விரையில் மேற்கொள்வதாக கூறினார்.

அதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சமயப் பெரியார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

site counter