அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 ஜூன், 2013

35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு ஆசிரியைகளுக்கு நிந்தவூர் மதீனாவில் பாராட்டு.

35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு ஆசிரியைகளுக்கு நிந்தவூர் மதீனாவில் பாராட்டு.

           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சுமார் 35 வருடங்கள் ஆசிரிய சேவையில் அரும்பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி.சுபைறா அலியார், திருமதி.முனீறா பதுறுதீன் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று (13-06-2013) நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
வித்தியாலய பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதியூ தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் ஓய்வு பெற்ற அதிபர், கலாபூசனம் திருமதி.எம்.செயினுலாப்தீன் பிரதம அதிதியாகவும், வித்தியாலய அதிபர் இரத்தின தீபம்.எஸ்.அகமது கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இரண்டு ஆசிரியர்களின் சேவைகளைப் பாராட்டி வாழ்துப் பத்திரங்கள் வாசித்து கையளிக்கப்பட்டதோடு, பொன்னாடைகளும் போற்றி கௌரவிக்கப்பட்டன. மேலும்,  பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை இவ்வாசிரியர்களால் கற்பிக்கப்பட்ட மாணவர்களும் இரு ஆசிரியர்களுக்கும் மலர் மாலை அணிவித்து, பல்வேறு விதமான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.










site counter