( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

'நம் நாட்டுக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதில் நமது ஜனாதிபதி மிகவும் அக்கரையோடு செயற்பட்டு வருகின்றார். இதனால் நமது நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு மாமனிதராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார்' என்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளருமான எம்.பி.எம்.மாஹிரின் மூன்று இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டு விழா சனியன்று கொழும்பு, வெள்ளவத்தை மெரின் கிரான்ட் பென்கிற் ஹோலில் இடம் பெற்றது.
அகில இலங்கை றபியத்துல் தரீக்கா அசோசியேஷனின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய செய்யத் முஹம்மட் யூ.பி.ஆஸீக் தங்கள் றிபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.