அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 2 டிசம்பர், 2013

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்.!


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரி.ஏ.நிசாம்  நேற்று நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்வருடம்  மதீனா மகா வித்தியாலயத்திலிருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தகுதிகாண் பரீட்சையின் முடிவுகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாமும், நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமும் பார்வையிட்டனர்.

அடி மட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் க.பொ.த(சா/த) மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.

கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத மாமனிதராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். - ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி புகழாரம் -


               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நம் நாட்டுக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதில் நமது ஜனாதிபதி மிகவும் அக்கரையோடு செயற்பட்டு வருகின்றார். இதனால் நமது நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு மாமனிதராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார்' என்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளருமான எம்.பி.எம்.மாஹிரின் மூன்று இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டு விழா சனியன்று கொழும்பு, வெள்ளவத்தை மெரின் கிரான்ட் பென்கிற் ஹோலில் இடம் பெற்றது.
அகில இலங்கை றபியத்துல் தரீக்கா அசோசியேஷனின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய செய்யத் முஹம்மட் யூ.பி.ஆஸீக் தங்கள் றிபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிந்தவூரில் படையினருக்கும் பொது மக்களுக்குமிடையிலான முறுகலினை வெறும் அரசியலாக மாற்றுவதற்கு பெரும் தேசிய கடும் போக்குவாதிகள் முயற்சிப்பதில் நின்றும் விடுபட வேண்டும். -ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி எச்சரிக்கை-

            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நிந்தவூரில் படையினருக்கும், பொது மக்களுக்குமிடையிலரன முறுகலின் போது ஏற்பட்ட மக்களது உணர்வுகளையும், அவர்களது நியாயமான வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ளாது, வெறுமனே எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடும், சந்தேகப் பார்வையோடும் நோக்குவதிலிருந்து இந்நாட்டிலுள்ள பெரும் தேசிய கடும் போக்கு வாதிகள் விலகிக் கொள்ள வேண்டும்' என ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்:-


site counter