அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 2 டிசம்பர், 2013

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்.!


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரி.ஏ.நிசாம்  நேற்று நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்வருடம்  மதீனா மகா வித்தியாலயத்திலிருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தகுதிகாண் பரீட்சையின் முடிவுகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாமும், நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமும் பார்வையிட்டனர்.

அடி மட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் க.பொ.த(சா/த) மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.


இதே வேளை சில ஆசிரியர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பான, தெளிவான விளக்கங்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter