.jpg)
கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு.
-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையற்றதும், சுகாதார சீர்கேடுகள் இல்லாததுமான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் முன்னோடி மாநாடு இன்று கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.