அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 மார்ச், 2014

சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

சுகாதார வாரத்தை முன்னிட்டு
கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு.
                   -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையற்றதும், சுகாதார சீர்கேடுகள் இல்லாததுமான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் முன்னோடி மாநாடு இன்று கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

site counter