அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 மார்ச், 2014

சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

சுகாதார வாரத்தை முன்னிட்டு
கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு.
                   -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையற்றதும், சுகாதார சீர்கேடுகள் இல்லாததுமான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் முன்னோடி மாநாடு இன்று கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜே.ஹுசைன்தீன், மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், முன்னாள் மாகாணப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரனி.ஏ.எல்.சஃபீர், இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாரை ஆகிய பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான டாக்டர்.திருமதி. அனுஸியா, டாக்டர்.எஸ்.சதுர்முகம், டாக்டர்.ஏ.எல்.அலாவுதீன், டாக்டர். தனகல ஆகியோர், இப்பிரதேசங்களில் பணியாற்றுகின்ற பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொறுப்பான வைத்தியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கணக்காளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' கிழக்கு மாகாணத்தைத் தூய்மைப்படுத்தி, முழு இலங்கைக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு செயலில் இறங்கியிருக்கும் சுகாதார சேவைப் பணியாளர்களான நாமனைவரும் நாம் பணியாற்றுகின்ற வைத்தியசாலைகள், சுகாதார சேவை நிலையங்கள், பரிசோதனை நிலையங்கள், மருந்துக் களஞ்சியங்கள் போன்றவற்றை முதலில் தூய்மையாக வைத்துக் கொள்ள திடசந்தர்ப்பம் பூணவேண்டும். 'உன்னைத் திருத்து, உலகம் திருந்தும்' என்ற பழமொழிக்கு ஒப்ப நாமிருக்கும் இடத்தை தூய்மைப்படுத்துவதன் ஊடாக, நம் தாய்க்கு ஒப்பான தாய் நாட்டை நோய்களற்ற சமாதானப் பூமியாக மாற்றுவோம்' எனத் தெரிவித்தார்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter