(ஏ.எம்.ஆஷிப்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது 2ஆம் பிரிவு, காரியப்பர் வீதியைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மட் அப்சான் என்ற 20 வயது நிரம்பிய இளைஞனின் சடலமே இது என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.