துபாய் நாட்டில், தான் பணிபுரிந்த வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பணிப்பெண்ணொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 10ம் திகதி 3 லட்சம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டதாக குறித்த இலங்கை பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, துபாய் நீதிமன்றம் 6 மாதகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை பணிப்பெண் சுமார் 12 வருடங்களாக குறித்த வீட்டில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக