அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 ஜூன், 2013

பொய்யான செய்தியை வெளியிட்டு, தனக்குக் களங்கம் ஏற்படுத்திய பத்திரிகை மீது ருபா 500 மில்லியன் கோரி வழக்குத் தாக்கல். -மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் களத்தில் -

பொய்யான செய்தியை வெளியிட்டு, தனக்குக் களங்கம் ஏற்படுத்திய பத்திரிகை மீது ருபா 500 மில்லியன் கோரி வழக்குத் தாக்கல்.
                -மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் களத்தில் -
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )


சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிடுகின்ற முஸ்லிம் முரசு வாராந்த பத்தரிகை தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்இ 500 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு கோரியுள்ளார்.

இப்பத்திரிகை பொய்யான தகவல்களை வெளியிட்டு தனது கௌரவத்திற்கும்இ மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்தரிகை ரூபா 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் மாகாண அமைச்சர் எம்.எம்.மன்சூர் சார்பில் கடிதம் (டுநவவநச னுநஅயனெ)) ஒன்று குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருமலையில் பிரதி அமைச்சர் ஒருவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மன்சூர் மது போதையில் இருந்ததாகவும் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்டதாகவும் அவரது பெயரை மறைமுகமாக தெரிவித்து இப்பத்திரிகை தனது முதலாவது இதழில் (2013ஃ05ஃ15) தகவல் வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டே தனது சட்டத்தரணி மூலம் தான் இந்த (டுநவவநச னுநஅயனெ) மனுவை அனுப்பியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.


site counter