காலநிலை சீற்றத்தால் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்குச் சேதம்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
வங்காள விரிகுடாக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நேற்றிரவு( 12.05.2013 நிந்தவூர்ப் பிரதேசத்தில் மழையுடன் வீசிய பெருங்காற்றினால் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையின் சிறுவர் விடுதி, பெண்கள் விடுதி போன்றவற்றின் கூரைகள் காற்றினால் சேதத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, அங்கிருந்த அலுமாரிகள், மருந்துப் பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றனவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட வைத்தியதிகாரி எம்.சி.எம்.மாஹீர் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் மேற்படி சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
Visual: DEMAGE IN NTR HOSPITAL.
Ampara Rafeek