அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 7 டிசம்பர், 2013

சூறாவளியாக மாறுகிறது தாழமுக்கம்; கிழக்கில் இன்று பலத்த காற்று வீசும்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறி வருகிறது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (7) மாலை பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
sc0226041bமட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சில சமயங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை தொடக்கம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
metromirror.lk

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி கலையரங்கில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் வலயக் கல்விக் காரியாலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.கலீல், ஏ.எல்.சக்காப், நிருவாக உத்தியோகத்தர். ஏ.ஜுனைதீன், பொறியியலாளர் ................................ ,

நிந்தவூரில் திவிநெகும திட்டத்தின் கீழ் பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்தி வரும் ' திவிநெகும' திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச கமநல சேவைகள் நிலைய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பழமரக்கன்றுத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.


site counter